பதிவு செய்த நாள்
03 ஜன2017
00:03
புதுடில்லி : மும்பையைச் சேர்ந்த, மகாநகர் காஸ் நிறுவனம், சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும், இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை இயக்க, ஒரு கி.மீட்டருக்கு, 60 பைசா செலவாகும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், அவர், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தில், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை நிரப்புவதற்கு, ‘இ – வாலெட் பேமென்ட்ஸ்’ என்ற மின்னணு பணப் பை சேவையையும் துவக்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர் கூறுகையில், ‘‘ சுற்றுச்சூழலுக்கு மாசற்ற, சி.என்.ஜி., இருசக்கர வாகனங்களால், காற்று மாசுபடுவது குறையும். இதன் மூலம், மும்பையில் உள்ள, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், சி.என்.ஜி., முறைக்கு மாற வாய்ப்பு கிடைத்துள்ளது,’’ என்றார்.
இந்த வாகனத்தில், தலா, 1.2 கிலோ எடையுள்ள இரு சி.என்.ஜி., சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், 120 – 130 கி.மீ., வரை வாகனத்தை இயக்க முடியும் என, மகாநகர் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|