பதிவு செய்த நாள்
03 ஜன2017
00:06
ஜாம்ஷெட்பூர் : டாடா ஸ்டீல் நிறுவனத்தின், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிரிவின் நிர்வாக இயக்குனர், டி.வி.நரேந்திரன் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளாக, உருக்கு துறை கடுமையான சவால்களை சந்தித்து வந்தது. குறிப்பாக, சீனாவில் இருந்து, மாதந்தோறும் மலிவு விலையில் இறக்குமதியாகி வந்த, 10 லட்சம் டன் உருக்குப் பொருட்களால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மத்திய அரசு உடனடியாக எடுத்த நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து உருக்கு துறை, இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது.
இந்நிலையில், நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டாடா ஸ்டீல் பாதிக்கப்பட்டது. எனினும், டிசம்பரில் பாதிப்பு குறைந்துள்ளது. இனி வரும் மாதங்களில், நிறுவனம் நன்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றின் விலை உயர்வால், கடந்த சில மாதங்களாக, உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|