பதிவு செய்த நாள்
03 ஜன2017
00:07
கோல்கட்டா : பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிப்புகள் இருந்தாலும், 500 கோடி ரூபாய் முதலீட்டில், இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக, ஜியோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோனி நிறுவனம், மொபைல் போன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில், மொபைல் போன் தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதனால், பணப்புழக்கம் குறைந்ததால், ஜியோனி, தொழிற்சாலை அமைக்குமா என்ற சந்தேகம் சந்தையில் எழுந்தது. ஆனால், அந்நிறுவனம், திட்டமிட்டபடி ஆலை அமைக்கப்படும் என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவன அதிகாரி அரவிந்த் வோக்ரா கூறியதாவது:செல்லாத நோட்டு அறிவிப்பால், மொபைல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விற்பனையும் மந்தமாக உள்ளது. அந்த அறிவிப்பு வெளியான, மூன்று தினங்களில், எங்கள் நிறுவனத்தின் விற்பனை, 20 சதவீதம் குறைந்தது. அது, தற்போது, 8 – 10 சதவீதமாக உள்ளது. இருப்பினும், எங்கள் நிறுவனம், மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், திட்டமிட்டபடி, பரிதாபாத்தில், 50 ஏக்கரில், தொழிற்சாலை அமைக்கும். இதற்காக, 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|