பதிவு செய்த நாள்
03 ஜன2017
00:09
மும்பை : நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான முதல் அரையாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, பொது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. இவை, அதிகம் பிரீமியம் வசூலித்த போதிலும், புயல், தீ விபத்து போன்றவற்றுக்கு, பெருந்தொகையை இழப்பீடாக வழங்க நேரிட்டதால், அவற்றின் லாபம் சரிவடைந்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், முறையே, 429 கோடி ரூபாய் மற்றும் 382 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் இந்நிறுவனங்கள், முறையே, 356 கோடி ரூபாய் மற்றும், 335 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தன. இதே காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் லாபம், 921 கோடி ரூபாயில் இருந்து, 514 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில், பிரீமியமாக, 11,204 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.இதே காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பர்டு நிறுவனத்தின் நிகர லாபம், 302 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 258 கோடி ரூபாயாக இருந்தது.
பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 288 கோடி ரூபாயில் இருந்து, 366 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையை உலுக்கிய, ‘வர்தா’ புயலால், பொது காப்பீட்டு நிறுவனங்கள், பெருந்தொகையை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது. இது குறித்த மதிப்பீடு, பொது காப்பீட்டு நிறுவனங்களின், மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் எதிரொலிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|