பொது காப்­பீட்டில் பொது துறை நிறு­வ­னங்­களின் லாபம் குறைந்­ததுபொது காப்­பீட்டில் பொது துறை நிறு­வ­னங்­களின் லாபம் குறைந்­தது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.08 ...
நிறு­வ­னங்­களின் வரு­மான வரியை குறைத்து சலு­கை­களை நீக்­கினால் முத­லீடு குவியும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2017
00:10

புது­டில்லி : ‘கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வரு­மான வரியை குறைத்து, அவற்­றுக்கு வழங்­கப்­படும் வரிச் சலு­கை­களை நீக்­கினால், அன்­னிய முத­லீ­டுகள் அதி­க­ளவில் குவியும்’ என, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பான, சி.ஐ.ஐ., தெரி­வித்­துள்­ளது.
இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்­தி­ரஜித் பானர்ஜி கூறி­ய­தா­வது: கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, தற்­போது, 30 சத­வீத வரு­மான வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இத்­துடன், ஆயத் தீர்வு, கூடுதல் வரி ஆகி­ய­வையும் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன. அதே சமயம், நிறு­வ­னங்கள் ஈட்டும் லாபத்­திற்­கான வரியை கணக்­கி­டு­கையில், 32 வகை­யான வரிச் சலு­கை­களை பெறவும் வசதி செய்­யப்­பட்டு உள்­ளது. அவற்றின் அடிப்­ப­டையில் கணக்­கிட்டால், நிறு­வ­னங்­களின் நிகர வரி, 19.8 சத­வீதம் என்­ற­ள­விற்கு வரு­கி­றது.எனவே, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் வரிச் சலு­கை­களை நீக்கி விட்டு, 18 சத­வீத நிகர வரி விதிக்க வேண்டும் என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­திற்கு ஆலோ­சனை தெரி­வித்­துள்ளோம்.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், வரி வரம்­பிற்குள் வரு­வோரின் எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன், பல முனை வரிக்கு பதி­லாக, சரக்கு மற்றும் சேவை வரி அம­லுக்கு வர உள்­ளதால், நிறு­வன வரியை குறைப்­பதால், மத்­திய அர­சுக்கு வருவாய் இழப்பு ஏற்­ப­டாது. வரியை குறைத்தால், அது, மேலும் பல நிறு­வ­னங்­களை வரி செலுத்த ஊக்­கு­விக்கும். அது­மட்­டு­மின்றி, சிங்­கப்பூர், பிரிட்டன் போல கவர்ச்­சி­க­ர­மான முத­லீட்டு மைய­மாக இந்­தியா உரு­வெ­டுக்கும். கறுப்புப் பணத்தை ஒழிக்க மேற்­கொள்­ளப்­பட்ட பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, வரி சீர்­தி­ருத்­தங்கள், ‘டிஜிட்டல்’ பணப் பரி­வர்த்­த­னைக்­கான ஊக்­கு­விப்பு சலு­கைகள் போன்­றவை, ரொக்கப் பரி­வர்த்­த­னையை குறைக்க உதவும்.
மின்­னணு பரி­வர்த்­த­னை­களை சுல­ப­மாக கண்­கா­ணிக்க முடியும் என்­பதால், சரக்கு மற்றும் சேவை வரி திட்ட செயல்­பாடு சிறப்­பாக இருக்கும் என்­ப­துடன், வரி வசூலும் அதி­க­ரிக்கும். இந்­தி­யாவில், மீண்டும் அதி­க­ அளவில் முத­லீ­டுகள் குவி­யவும், அமைப்பு சார்ந்த துறையில் வேலை­வாய்ப்­புகள் அதி­க­ரிக்­கவும், உயர்­கல்வி மையங்­களில், ஆய்­வுக்­கான முத­லீ­டுகள் பல மடங்கு பெரு­கவும், புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் முத­லீட்டில் தேசிய நிதியம் ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும்இவ்­வாறு அவர் தெரி­வித்­து உள்ளார்.
கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் வரி, அடுத்த நான்கு ஆண்­டு­களில், 30 சத­வீ­தத்தில் இருந்து, 25 சத­வீ­த­மாக குறைக்­கப்­படும். -அருண் ஜெட்லி, மத்­திய நிதி­ய­மைச்சர், 2016 – 17ம் நிதி­யாண்டின் பட்ஜெட் உரையில்...

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)