பதிவு செய்த நாள்
04 ஜன2017
00:01
புதுடில்லி : தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மொபைல் போன் சேவையில், கால் டிராப் எனப்படும், அடிக்கடி அழைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையில், ஏர்செல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, ஜூலை – செப்., வரையிலான காலத்தில், இந்நிறுவனத்தின் 12 தொலை தொடர்பு வட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இது தெரியவந்துள்ளது. பீஹாரில், ஒரு மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட, 2 சதவீத அளவை விட, ஆறு மடங்கு அதிகமாக, அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் தொலை தொடர்பு சேவையை பயன்படுத்தும் நேரங்களில், அழைப்பு துண்டிக்கப்படுவதில், ஏர்செல் நிறுவனத்தின் அசாம் பிரிவு முதலிடத்தில் உள்ளது. கால் டிராப் பிரச்னையில், ஏர்செல் நிறுவனத்தை அடுத்து, வோடபோன், பி.எஸ்.என்.எல்., டாடா டெலிசர்வீசஸ் ஆகியவை உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|