பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:33
புதுடில்லி : பேடிஎம் நிறுவனம், பேமன்ட்ஸ் வங்கி துவக்க, ரிவர்வ் வங்கி இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
பேடிஎம் நிறுவனம், ‘இ – வாலட்’ எனும் மின்னணு பணப் பை சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி, மொபைல் போன் ரீசார்ஜ், வாடகை கார் பதிவு உள்ளிட்ட பணிகளை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், பேடிஎம், பேமன்ட்ஸ் வங்கி துவக்க, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டது. அதற்கு, தற்போது, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, பேடிஎம் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், பேமன்ட்ஸ் வங்கி துவக்க, ரிசர்வ் வங்கி, இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது. வங்கியை துவக்குவதற்கான பணிகள், அடுத்த மாதம் துவங்கும். ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், ஒரு லட்சம் ரூபாய் மட்டும், ‘டிபாசிட்’ ஏற்கப்படும். உ.பி., மாநிலம், நொய்டாவில், முதல் வங்கி கிளை துவக்கப்பட உள்ளது. சிறப்பான சேவையின் மூலம், அதிக வாடிக்கையாளர்களை எங்கள் நிறுவனம் ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|