பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:44
புதுடில்லி : செல்லாத நோட்டு அறிவிப்புக்கு இடையிலும், இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல், நவ., வரையிலான காலத்தில், இந்தியா வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 78.53 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 71.14 லட்சமாக குறைந்திருந்தது. அதேபோல் சுற்றுலா துறை ஈர்த்த அன்னிய செலாவணியும், 1.21 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நவ., மாதம் வந்த, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 9.3 சதவீதம் அதிகரித்து, 8.91 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செல்லாத நோட்டு அறிவிப்புக்கு இடையிலும், இந்தியா வரும், சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி நிலையாக உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட, 12 மொழிகளில், உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்கள் உட்பட, பல இடங்களில், சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்த, 2,497 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|