பதிவு செய்த நாள்
04 ஜன2017
23:46
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சலுகைகளை வழங்க, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அமெரிக்கா, கொரியா, ஜப்பான் உட்பட, ஆறு நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் தொழிற்சாலை அமைக்க, பல்வேறு சலுகைகளை, மத்திய அரசிடம் கேட்டு வருகிறது. குறிப்பாக, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்துமாறு, ஆப்பிள் நிறுவனம் கோரி வருகிறது.
இந்தியாவில், சீனாவைச் சேர்ந்த, ஹூவேய், ஜியோமி உள்ளிட்ட, 42 நிறுவனங்கள் மொபைல் போன்களை தயாரித்து வருகின்றன. அவை, எந்த விதமான சலுகைகளையும் கோராத நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டும் சலுகை வழங்க முடியாது என, மத்திய வர்த்தக அமைச்சகம் திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது. இதனால், ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில், ரெடிங்டன், இன்கிராம் மைக்ரோ நிறுவனங்கள் மூலம், அதன் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|