பதிவு செய்த நாள்
05 ஜன2017
16:18

சென்னை : தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.362 கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தபால் அலுவலகங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. ரூ.2 ஆயிரத்து 577 கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் தபால் அலுவலக கணக்குகளில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டுள்ளன. இதுவரை 97 தபால் ஏ.டி.எம்.கள் சோதனை முறையில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தவில்லை. இதுவரை 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் 1 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்படும்.
இந்த ஏ.டி.எம். அட்டைகள் மூலம் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். விரைவில் அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணத்தை எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் இறுதியில் தபால்துறை வங்கிகள் செயல்பாட்டுக்கு வரும். அதன் பிறகு, தபால்துறை வங்கி நேரடியாக ரிசர்வ் வங்கியுடன் தொடர்பு கொண்டு பண பரிமாற்றத்தில் ஈடுபட முடியும் என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|