ஹோண்டா மோட்டார் சைக்கிள் 2016ல் விற்­பனை உயர்வுஹோண்டா மோட்டார் சைக்கிள் 2016ல் விற்­பனை உயர்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.81 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.81 ...
இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்க ஆலோ­சனை நிறு­வ­னத்தை நாட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2017
23:41

புது­டில்லி : இந்­தி­யாவில், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு, ஆலோ­சனை நிறு­வ­னத்தின் உத­வியை நாட, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­சகம் திட்­ட­மிட்டு உள்­ளது.
மத்­தியில், பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அரசு அமைந்த இரண்­டரை ஆண்­டு­களில், தொழில் துறையை ஊக்­கு­விக்க, பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அன்­னிய முத­லீ­டு­களை அதி­க­ளவில் ஈர்ப்­ப­தற்கும், உள்­நாட்டில், தொழில் முனைவோர், சுல­ப­மாக தொழில்­களை துவங்­கு­வ­தற்கும் தடை­யாக இருந்த, கடு­மை­யான விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்டு உள்­ளன.
சலுகை :மருந்து, விமானம், உணவு உள்­ளிட்ட பல துறை­களில், அன்­னிய நிறு­வ­னங்கள், அரசு அனு­ம­தி­யின்றி நேர­டி­யாக முத­லீடு செய்ய, அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. தொழில் உரிமம் பெறும் நடை­மு­றைகள் மிகவும் எளி­மை­யாக்­கப்­பட்டு உள்­ளன. விண்­ணப்­பித்த ஒரு வாரத்தில், தொழிற்­சா­லை­க­ளுக்கு மின் இணைப்பு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது. சிக்­கலின்றி, தொழிற்­சாலை அமைப்­ப­தற்­கான நிலம் வாங்க வச­தி­யாக, நிலம் கைய­கப்­ப­டுத்தும் சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.
மேலும், மூல­தன முத­லீட்டு மானியம், நிறு­வ­னங்­களின் நடை­முறை மூல­தன வட்­டிக்கு மானியம், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­மான வரி, மூல­தன ஆதாய வரிச் சலு­கைகள் உள்­ளிட்­டவை அறி­விக்­கப்­பட்டு உள்­ளன. இதனால், தொழில் துவங்­கு­வது சுல­ப­மாகும்; தொழில் துறை, சிறப்­பான வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், மத்­திய, மாநில அர­சுகள் மேற்­கொண்ட சீர்­தி­ருத்­தங்கள், தொழில் துறையின் அடிப்­படை கட்­ட­மைப்பில் பெரிய மாற்­றத்தை கொண்டு வர­வில்லை.
உலக வங்கிஇது, ‘சுல­ப­மாக தொழில் செய்ய உகந்த நாடுகள்’ குறித்து, உலக வங்கி வெளி­யிட்ட ஆய்­வ­றிக்கை மூலம் தெரிய வந்­துள்­ளது. சுல­ப­மாக தொழில் செய்­வ­தற்­கான, 10 அம்­சங்­களின் அடிப்­ப­டையில், 190 நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில், இந்­தியா, 130வது இடத்தை பிடித்­துள்­ளது. இதை­ய­டுத்து, வரும் ஆண்­டு ­களில், இந்­தி­யாவை, முதல் 50 நாடு­களில் ஒன்­றாக முன்­னேற்றும் நோக்கில், ஆலோ­சனை நிறு­வ­னத்தின் உத­வியை நாட, முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.
இது குறித்து, வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­ச­கத்தின் கீழ் செயல்­படும், தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறை வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: தொழில் துவங்­கு­வதை மேலும் சுல­ப­மாக்க செய்ய வேண்­டிய மாற்­றங்கள் குறித்து தெரி­விக்க, ஆலோ­சனை நிறு­வனம் ஒன்­றுடன் ஒப்­பந்தம் செய்ய முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இந்­நி­று­வனம், அரசு துறை­க­ளுடன் இணைந்து செயல்­பட்டு, அதன் பரிந்­து­ரையை, மத்­திய அர­சுக்கு வழங்கும். இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)