இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.81இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.81 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
பொங்கல் பரிசு அறிவிப்பால் எகிறியது ஏலக்காய் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2017
10:37

ரேஷன் கடைகளில், வரும் 9ல் இருந்து, பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், 1.80 கோடி ரேஷன்கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளன. தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், தலா, 20 கிராம் எடையில் முந்திரி, திராட்சை மற்றும், ஐந்து கிராம் ஏலக்காய் ஒரு சேர வழங்கப்படும். இதனால், தேவையான ஏலக்காயை, மொத்தமாக கொள்முதல் செய்ய, கூட்டுறவு அதிகாரிகள், போடிநாயக்கனுார் சந்தைக்கு படையெடுத்துள்ளனர். ஏலக்காய் விலை எகிறி உள்ளது.

கூட்டுறவு துணைப்பதிவாளர் ஒருவர் கூறியதாவது: அரிசி, சர்க்கரை தவிர்த்து, முந்திரி, திராட்சை, ஏலக்காய் வாங்க, 30 ரூபாய், இரண்டு அடி கரும்பு துண்டுக்கு, 15 ரூபாய் சேர்த்து, கொள்முதல் செய்ய, ஒரு ரேஷன் கார்டுக்கு, தலா, 45 ரூபாய் வீதம், அரசு நிதி ஒதுக்கியுள்ளது.வரும், 9ல் இருந்து, பொங்கல் பரிசு வழங்க, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடு, முழுவீச்சில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

போடி ஏலக்காய் வியாபாரிகள் கூறியதாவது:கேரளாவில், ஏலக்காய் விளைச்சல் அதிகம் என்றாலும், போடி, தேவாரம், கோம்பை, குமுளி ஆகிய சந்தைகளில், தினசரி ஏலம் நடக்கும். தமிழகத்தில், ஏலக்காய் சந்தை என கூறப்படும் போடி மார்க்கெட்டில், விலை நிர்ணயிக்கப்படுகிறது.வறட்சியால், ஏலக்காய் சாகுபடி, 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தரத்திற்கேற்ப, கிலோ, 800 - 1,200 ரூபாய் விற்ற ஏலக்காய், தற்போது, 1,100 - 1,320 ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கழிவுடன் கூடிய தரம் பிரிக்காத ஏலக்காய். தற்போது, முதல் ரக ஏலக்காய் வரத்து கிடையாது. இரண்டாம் ரகம், கிலோ, 1,650 ரூபாய், மூன்றாம் ரகம், 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது. அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளதால், விலை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)