பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:15
புதுடில்லி : ஆர்ஜியோவின் மொபைல் போன் சேவையை, இலவச சலுகை முடிந்த பின்னும் தொடர்வதற்கு, தற்போதைய, 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதன் விபரம்: நாடு முழுவதும், 500 ஆர்ஜியோ வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்டோரிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இலவச சேவைக்காக மட்டும், ஆர்ஜியோவை பயன்படுத்தவில்லை என, 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிவேக தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்துவதாக, 32 சதவீதத்தினர் கூறியுள்ளனர். மேலும், 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், ஆர்ஜியோவின் இலவச சலுகை முடிந்து, கட்டண சேவை துவங்கிய பின்னும், அதே இணைப்பில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்; 8 சதவீதம் பேர், குரல் வழி சேவை சரி செய்யப்பட்டால், தொடர விரும்புவதாக கூறியுள்ளனர். இணைப்பில் தொடர, 6 சதவீதம் பேர் தயங்குகின்றனர்.
ஆய்வில், 50 சதவீத வாடிக்கையாளர்கள், 4 ஜி.பி., டேட்டா மற்றும் இலவச குரல் அழைப்புக்காக, 400 – 500 ரூபாய் வரை செலுத்த தயார் என, கூறியுள்ளனர். ஆர்ஜியோ இணைப்புக்காகவே, 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், தங்களது மொபைல் போன்களை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். குரல் சேவை, தரமாக இருந்ததாக, 72 சதவீதம் பேரும்; தரமாக இல்லை என, 4 சதவீதத்தினரும் கூறிஉள்ளனர். கால் டிராப் பிரச்னை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக, 12 சதவீதத்தினரும்; 38 சதவீதத்தினர், அப்பிரச்னை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|