பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:16
புதுடில்லி : மொபிகுவிக், 50 கோடி ரூபாய் முதலீட்டில், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
மொபிகுவிக் நிறுவனம், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 50 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம், ஆமதாபாத், லக்னோ, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் விரிவாக்க சேவையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பை அடுத்து, ரொக்க பணம் இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் நடக்கிறது. இதற்காக, எங்கள் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 50 கோடி ரூபாய் முதலீட்டில், ஆமதாபாத், லக்னோ, விஜயவாடா, மும்பை, புனே, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், கொச்சி, ஜெய்ப்பூர், சண்டிகரில், அலுவலகங்களை அமைக்க உள்ளது. இதன் மூலம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|