பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:17
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏற்றுமதி நிறுவனங்கள், கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெற, தாமதமாவதாக கவலை தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, தொடர்ந்து ஏற்றுமதி மேற்கொள்ள முடியாமலும், போதிய நடைமுறை மூலதனம் இல்லாமல் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றன. இந்த பிரச்னையை, வருவாய் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். விரைவில் அறிமுகமாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் கீழ், ஏற்றுமதி நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய வரியை, ஒரு வாரத்திற்குள் திரும்ப அளிக்கப்படும் என, வருவாய் துறை உறுதி அளித்துள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களுக்குள், கூடுதலாக செலுத்தப்பட்ட வரி, திரும்ப வழங்கப்படாவிட்டால், அதற்கான வட்டியும் ஏற்றுமதியாளர்களுக்கு தரப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|