டாடா சன்ஸ் இயக்­குனர் பத­வியில் இருந்தும் மிஸ்திரி நீக்­கப்­ப­டு­கிறார்டாடா சன்ஸ் இயக்­குனர் பத­வியில் இருந்தும் மிஸ்திரி நீக்­கப்­ப­டு­கிறார் ... வங்­கி­களில் காசோலை தேவை 5 மடங்கு அதி­க­ரிப்பு வங்­கி­களில் காசோலை தேவை 5 மடங்கு அதி­க­ரிப்பு ...
மாநி­லங்­களின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
02:18

புது­டில்லி : ‘‘மாநி­லங்­களில், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­ க­ளுக்கு, புதிய திட்டம் உரு­வாக்­கப்­படும்,’’ என, மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: அனைத்து மாநி­லங்­களும் ஏற்­று­ம­தியில் முன்­னேற வேண்டும் என்ற நோக்­கத்தில், ஏ.எஸ்.ஐ.டி.இ., என்ற திட்­டத்தை, மத்­திய அரசு செயல்­ப­டுத்தி வந்­தது. இத்­திட்­டத்தின் கீழ், மாநி­லங்­களில், ஏற்­று­ம­திக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்தும் பொறுப்பை, மாநில அர­சு­க­ளுக்கு வழங்க வேண்டும் என, 14வது நிதிக் குழு ரி­வித்­தது. அதை­யேற்று, இத்­திட்டத்தை செயல்­ப­டுத்தும் பொறுப்பு, மாநில அர­சு­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, ஏற்­று­மதி மேம்­பாடு தொடர்­பாக, நிலு­வையில் உள்ள அனைத்து திட்­டங்­களும், மாநில அர­சு­க­ளுக்கு மாற்­றப்­பட்­டன.
இந்­நி­லையில், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, தேவை­யான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு, மத்­திய அரசே பொறுப்­பேற்க வேண்டும் என, கடந்த ஆண்டு, மாநில அர­சுகள் கோரிக்கை விடுத்­தன. இதை­ய­டுத்து, அனைத்து மாநில வர்த்­தகத் துறை அமைச்­சர்கள், வர்த்­தக வளர்ச்சி மற்றும் மேம்­பாட்டு குழு உறுப்­பி­னர்கள் உள்­ளிட்­டோ­ரிடம் ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது. அதன் முடிவில், மாநி­லங்­களின் ஏற்­று­மதி கட்­ட­மைப்பு வச­திக்கு, தனி திட்­டத்தின் கீழ் நிதி­யு­தவி வழங்­கு­வது என, தீர்­மா­னிக்­கப்­பட்டு உள்­ளது.
ஏற்­று­மதி திட்­டங்­க­ளுக்­கான வர்த்­தக அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி என்ற இந்த திட்­டத்தின் கீழ், மாநி­லங்­களில் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­படும். இத்­திட்டம் குறித்த விரி­வான அறிக்கை, விரைவில் வெளி­யி­டப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)