பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:18
புதுடில்லி : ‘‘மாநிலங்களில், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி களுக்கு, புதிய திட்டம் உருவாக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: அனைத்து மாநிலங்களும் ஏற்றுமதியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், ஏ.எஸ்.ஐ.டி.இ., என்ற திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. இத்திட்டத்தின் கீழ், மாநிலங்களில், ஏற்றுமதிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என, 14வது நிதிக் குழு ரிவித்தது. அதையேற்று, இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்றுமதி மேம்பாடு தொடர்பாக, நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும், மாநில அரசுகளுக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், ஏற்றுமதியை மேம்படுத்த, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என, கடந்த ஆண்டு, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, அனைத்து மாநில வர்த்தகத் துறை அமைச்சர்கள், வர்த்தக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் முடிவில், மாநிலங்களின் ஏற்றுமதி கட்டமைப்பு வசதிக்கு, தனி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி திட்டங்களுக்கான வர்த்தக அடிப்படை கட்டமைப்பு வசதி என்ற இந்த திட்டத்தின் கீழ், மாநிலங்களில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கை, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|