பதிவு செய்த நாள்
07 ஜன2017
02:19
மும்பை : செல்லாத நோட்டு அறிவிப்பால், காசோலைகளின் தேவை, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, கோட்டக் மகிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து, ரொக்கப் பணம் இல்லாத, பணப் பரிவர்த்தனைக்கு மாறுமாறு அனைவரையும், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால், வங்கிகளில், காசோலையின் தேவை, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மகிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த வங்கியின் செயல் துணைத் தலைவர், உதய் கோட்டக் கூறியதாவது:செல்லாத நோட்டு அறிவிப்பால், ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. பலரும், காசோலை கேட்பதால், அதற்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதை சமாளிக்கும் வகையில், விரைந்து, காசோலையை தயாரிக்க முடியவில்லை. இதனால், காசோலை புத்தகத்தை பெற முன்பைவிட வாடிக்கையாளர்கள் அதிகம் காக்க வேண்டியதாக இருக்கிறது. ரொக்கப் பணம் இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையால், இந்தியா, புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|