பதிவு செய்த நாள்
08 ஜன2017
01:47
புதுடில்லி:ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும், வட்டி சலுகை தொடர்வது குறித்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி, ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு, வட்டி மானியம் வழங்கி வருகிறது. இந்த திட்டம், 2015 நவ., மாதம் துவங்கியது. இந்நிலையில், மத்திய பொது பட்ஜெட், விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில், வட்டி மானியம் தொடர்வது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, ஏற்றுமதியாளர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, கைவினை பொருட்கள், தேயிலை, அரிசி, தரைவிரிப்பு உள்ளிட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, 2015ல் இருந்து, வட்டி மானியம் வழங்கி வருகிறது. அதை தொடர்வதற்கான அறிவிப்பு, வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்காக, நிதி அமைச்சகம், 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|