பதிவு செய்த நாள்
08 ஜன2017
01:50
புதுடில்லி:சீனாவைச் சேர்ந்த செய்க் மோட்டார், இந்தியாவில் உள்ள, ஜி.எம்., நிறுவனத்தின், ஹலோல் ஆலையை வாங்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில், கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, குஜராத் மாநிலம், ஹலோல்; மஹாராஷ்டிரா மாநிலம், தாலேகானில், தொழிற்சாலைகள் உள்ளன. சீனாவைச் சேர்ந்த செய்க் மோட்டார் கார்ப்பரேஷன், மோட்டார் வாகன துறையில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம், இந்தியாவில், கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஜெனரல் மோட்டார்சின் ஆலையை கையகப்படுத்த முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில், 100 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாக, ஜெனரல் மோட்டார்ஸ், கடந்த ஆண்டு அறிவித்தது. இந்திய போட்டி ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:குஜராத், ஹலோலில், ஜெனரல் மோட்டார்சுக்கு சொந்தமான ஆலை, ஆண்டுக்கு, 1.10 லட்சம் கார் தயாரிக்கும் திறன் உடையது. அங்கு, 1,100 பேர் பணிபுரிகின்றனர். அந்த ஆலையை வாங்க, செய்க் மோட்டார் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|