பதிவு செய்த நாள்
08 ஜன2017
01:53
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் வேளாண் மற்றும் அதை சார்ந்த முட்டை, பால், கம்பளி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி, 4.1 சதவீதமாக அதிகரிக்கும் என, மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க துறை, மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், நடப்பு சீசனில், வேளாண் உற்பத்தி நன்கு உள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளின் வளர்ச்சி, 4.1 சதவீதம் என்றளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் இருந்ததை விட, 1.4 சதவீதம் அதிகமாகும். நடப்பு கரீப் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, 13.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, தெரிகிறது. இது, முந்தைய ஆண்டில், 12.40 கோடி டன் என்றளவில் இருந்தது.
ரபி பருவத்திலும், அதே அளவுக்கு, உணவு தானிய உற்பத்தி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு முழு பருவத்தில், தானிய உற்பத்தி, 27 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளின் பங்கு, 15 – 16 சதவீதம் என்றளவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|