பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:27
புதுடில்லி : ‘நாட்டில், போதிய அளவுக்கு சர்க்கரை இருப்பு உள்ளதால், அதன் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படாது’ என, மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, மத்திய உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு நிதிஆண்டில், நாட்டின் சர்க்கரை பயன்பாடு, 2.50 கோடி டன் என்றளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 2.55 கோடி டன்னாக இருந்தது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களில், சர்க்கரை பயன்பாடு, 45 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. நடப்பாண்டில், சர்க்கரை அளிப்பு, 3.02 கோடி டன்னாக இருக்கும் என, தெரிகிறது.
நடப்பு சீசனில், சர்க்கரை ஆலைகள், ஏற்கனவே, 80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால், தற்போது, ஒரு கிலோ சர்க்கரையின் விலை, 40 ரூபாய் என்றளவில் உள்ளது. உள்நாட்டில், போதுமான அளவுக்கு சர்க்கரை இருப்பு உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை. இதனால், சர்க்கரை மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|