பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:34
மும்பை : பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை மற்றும் ‘ஆன் லைன்’ டாக்சி சேவை நிறுவனங்களின் வருவாய் உயர்ந்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘கூப்பன் துனியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:பண மதிப்பு நீக்க நடவடிக்கை, பணத் தட்டுப்பாடு போன்றவற்றால், வலைதளம் மூலம் உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. அத்துடன், பயணங்களுக்கு வலைதளம் வாயிலாக பதிவு செய்வதும் உயர்ந்துள்ளது. இந்த வகையில், ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை சேவையை வழங்கும், பேடிஎம், பிரீசார்ஜ், மொபிகுவிக் ஆகிய நிறுவனங்கள், கடந்த இரு மாதங்களாக, சிறப்பாக செயல்பட்டு உள்ளன.
‘பிட்சா’ உணவுகளை விற்பனை செய்யும், டொமினோ பிட்சா, வலைதளத்தில் பயண டிக்கெட்டுகளை பதிவு செய்யும், யாத்ரா டாட் காம் ஆகிய நிறுவனங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. மெக்டொனல்ஸ் நிறுவனத்தின் வலைதளம் மூலம், உணவுப் பொருட்களுக்கு, ‘ஆர்டர்’ வழங்குவது, 90 சதவீதம் அதிகரித்துள்ளது. அது போல, புட்பாண்டா நிறுவனம், 10 நாட்களில், 11 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களிடம் இருந்து, ஆர்டர் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில், யாத்ரா நிறுவன வலைதளத்தில், 400க்கும் அதிகமான உள்ளூர் விமான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன; 3,500க்கும் மேற்பட்ட, ஊபர் டாக்சி சேவைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|