பதிவு செய்த நாள்
09 ஜன2017
23:35
பைசலாபாத் : பாகிஸ்தானில், மின் பற்றாக்குறை காரணமாக, ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
உலகில், பருத்தி உற்பத்தியில், பாகிஸ்தான், நான்காவது பெரிய நாடாக உள்ளது. இதனால், அந்நாடு, ஜவுளித் துறையில், விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், தற்போது மின் பற்றாக்குறை காரணமாக, ஜவுளித் துறையின் வளர்ச்சி வெகுவாக பாதித்துள்ளது.
இது குறித்து, அந்நாட்டு ஜவுளித் துறையினர் கூறியதாவது: பாகிஸ்தானில், பைசாலபாத் உள்ளிட்ட நகரங்களில், அதிகளவில் ஜவுளி ஆலைகள் உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேல், மின் துறையில், புதிய முதலீடுகள் செய்யாததுடன், போதிய மின் வழித்தட வசதிகளும் ஏற்படுத்தவில்லை. இதனால், கடுமையான மின் பற்றாக்குறை நிலவுவதால், ஜெனரேட்டர் பயன்படுத்தும் போது, உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, பல ஜவுளி ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. எஞ்சிய ஆலைகளிலும், முழு அளவுக்கு உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், எங்கள் வாடிக்கையாளர்களாக திகழும், வியட்நாம், வங்கதேசத்துக்கு, குறித்த காலத்தில், சப்ளை செய்ய முடியவில்லை. அவை, பாகிஸ்தானை தவிர்த்து, மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளன.எனவே, ஜவுளித் துறையை ஊக்குவிக்க, அரசு, தடையில்லா மின்சாரம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|