பாகிஸ்தான் ஜவுளி துறை மின் பற்­றாக்­கு­றையால் பாதிப்பு பாகிஸ்தான் ஜவுளி துறை மின் பற்­றாக்­கு­றையால் பாதிப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.04 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.04 ...
2 பொது துறை நிறு­வ­னங்­க­ளுக்கு இழப்பை குறைக்க அரசு அறி­வு­றுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
23:35

புது­டில்லி : இழப்பை குறைத்து, நிதி­நி­லையை சீர்­செய்­யு­மாறு, பொதுத் துறையைச் சேர்ந்த, இரு பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களை, மத்­திய நிதி­­அமைச்­சகம் அறி­வு­றுத்­தி­ உள்­ள­தாக, தகவல் வெளி­யாகி உள்­ளது.
நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டின், ஏப்., – செப்., வரை­யி­லான அரை­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, யுனைடெட் இந்­தியா இன்­சூரன்ஸ் நிறு­வனம், 429 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­துள்­ளது. கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், இந்­நி­று­வனம், நிகர லாப­மாக, 356 கோடி ரூபாய் ஈட்­டி­யி­ருந்­தது. அது போல, நடப்பு நிதி­யாண்டின், முதல் அரை­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஓரி­யன்டல் இன்­சூரன்ஸ் நிறு­வனம், 382 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­துள்­ளது. கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில், இந்­நி­று­வனம், 335 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யி­ருந்­தது. இந்­நி­று­வ­னங்கள் அதிகம் பிரீ­மியம் வசூ­லித்த போதிலும், புயல், தீ விபத்து போன்­ற­வற்­றுக்கு, பெருந்­தொ­கையை இழப்­பீ­டாக வழங்க நேரிட்­டதால், இழப்பை சந்­தித்­துள்­ளன.
இது குறித்து, அரசு உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: மத்­திய பட்­ஜெட்டில், வங்கித் துறையில் முக்­கிய சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்ளப் போவ­தாக, நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன், பொதுத் துறையைச் சேர்ந்த, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களை, பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லி­டு­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் எனவும் கூறி­யி­ருந்தார். இந்­ந­டவ­டிக்­கைக்கு முன், பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் நிதி­நிலை நன்­றாக இருக்க வேண்டும் என, மத்­திய அரசு விரும்­பு­கி­றது. அதனால், இரு நிறு­வ­னங்­க­ளிடம், இழப்பை குறைத்து, நிதி­நி­லையை உயர்த்­து­மாறு கூறப்­பட்­டுள்­ளது.
பொதுத் துறை நிறு­வ­னங்கள், பங்­குச்­சந்­தையில் நுழை­வதன் மூலம், அவற்றின் அனைத்து செயல்­பா­டு­களும் வெளிப்­ப­டை­யாக தெரிய வரும். பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்­புக்கும் அவை ஆளாகும். இது, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்கு உதவும். அத்­துடன், பங்கு விற்­பனை மூலம், மத்­திய அர­சுக்கு கணி­ச­மான வருவாய் கிடைக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.
இந்­தி­யாவில், 52 காப்­பீட்டு நிறு­வ­னங்­களில், ஆயுள் காப்­பீட்டில், 24 நிறுவனங்களும், பொது காப்­பீட்டில், 28 நிறு­வ­னங்­களும் இயங்கி வரு­கின்­றன. பொதுத் துறையில், நியூ இந்­தியா அஸ்யூரன்ஸ், நேஷனல் இன்­சூரன்ஸ், யுனைடெட் இன்­சூரன்ஸ், ஓரி­யன்டல் இன்­சூரன்ஸ் ஆகிய நான்கு நிறு­வ­னங்­களும், இ.சி.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி., என்ற இரு சிறப்பு காப்­பீட்டு நிறு­வ­னங்­களும் உள்­ளன. ஆயுள் காப்­பீட்டு துறையில், லைப் இன்­சூரன்ஸ் கார்ப்­ப­ரேஷன் நிறு­வனம் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)