பதிவு செய்த நாள்
11 ஜன2017
01:23
புதுடில்லி : எக்சிம் பேங்க், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுக்கு ஆலோசனை, கடனுதவி உள்ளிட்ட நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.
இவ்வங்கி, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய, ‘எக்சிம் மித்ரா’ என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வலைதளத்தில், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான அனைத்து விபரங்களையும், வர்த்தகர்கள் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. சர்வதேச சந்தைகளில், எந்தெந்த பொருட்களுக்கு தேவை அதிகமுள்ளது என்பதையும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்காகும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் குறித்த தகவல்களையும், இந்த வலைதளம் வழங்குகிறது.
அத்துடன், ஏற்றுமதி செய்ய விரும்புவோருக்கு கிடைக்கும் பல்வேறு கடன் வசதிகள், காப்பீட்டு திட்டங்கள், முகவர்களின் முகவரிகள் உள்ளிட்ட தகவல்களையும் காணலாம். அது போல, இறக்குமதியாளர்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும், இதில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|