பதிவு செய்த நாள்
11 ஜன2017
23:55
புதுடில்லி : சாம்சங் இந்தியா நிறுவனம், மொபைல் போன் வசதியுடன் கூடிய, ‘கியர் எஸ் 3’ எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, 28,500 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, சாம்சங் இந்தியா நிறுவனத்தின், மொபைல் போன் வாத்தக பிரிவின் துணைத் தலைவர் மனு சர்மா கூறியதாவது: கைகளில் அணியும், மொபைல் போன் வசதிகளுடன் கூடிய கடிகார பிரிவின் வர்த்தகம் குறைந்த அளவிலேயே உள்ளது. எனினும், அதில், நிறுவனம் வலுவான வளர்ச்சி அடைந்து வருகிறது. இச்சாதனங்களில், பல்வேறு சிறப்பங்கள் உள்ள போதிலும், அவை, கவர்ச்சிகரமான வடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது, நிறுவனத்தின் கொள்கை. அதன்படி தயாரிக்கப்பட்டுள்ள, ‘கியர் எஸ் 3’ ஸ்மார்ட் வாட்ச் , 1.3 அங்குலம் வட்ட, ‘அமோல்டு’ தொடுதிரை, ௧கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர், 768 எம்.பி. ரேம் வசதியுடன், ‘கிளாசிக், பிரன்டியர்’ என, இரு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|