பதிவு செய்த நாள்
11 ஜன2017
23:56
புதுடில்லி : கைனடிக் நிறுவனம், எஸ்.டபிள்யு.எம்., இருசக்கர வாகனங்களை, அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
கைனடிக் நிறுவனம், எம்.வி. அகஸ்டா நிறுவனத்தின், மோட்டார் சைக்கிள்களை, இந்தியாவில் விற்பனை செய்கிறது. இந்நிலையில், இத்தாலி நாட்டை சேர்ந்த, எஸ்.டபிள்யு.எம்., நிறுவனத்தின் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 1971ல், இத்தாலியில் துவங்கிய, எஸ்.டபிள்யு.எம்., இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. அந்த நிறுவனம், தன் பிரீமியம் வகை இருசக்கர வாகனங்களை, இந்தியாவில் விற்க திட்டமிட்டுள்ளது. அதை, கைனடிக் நிறுவனம் மூலம் விற்பனை செய்வதற்கான, சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, கைனடிக் நிறுவனத்தின் பொறியாளர்கள், எஸ்.டபிள்யு.எம்., இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரித்துள்ளனர். தற்போது, பேச்சு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால், விரைவில், கைனடிக், எஸ்.டபிள்யு.எம்., வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என, எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|