பதிவு செய்த நாள்
11 ஜன2017
23:57
புதுடில்லி : மின்னணு பணப் பை சேவையை வழங்கி வரும், ‘பேடிஎம்’ நிறுவனம், விரைவில், ‘பேடிஎம் பேமென்ட் பேங்க்’ என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட வங்கிச் சேவையை துவக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:பேடிஎம் சேவை, ஜன., 15க்குப் பின் நிறுத்தப்படும் என, வதந்தி பரவி வருகிறது. அதில் உண்மையில்லை. பேடிஎம், நிறுவனத்தின் உரிமை மட்டுமே, புதிய பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்கிற்கு மாற்றப்படுகிறது. இதன் மூலம், பேடிஎம் வாடிக்கையாளர்கள், கூடுதலான சேவைகளை பெற முடியும். அவர்கள் விரும்பினால், பேடிஎம் பேங்க்கில் சேமிப்பு கணக்கு துவங்கலாம். அதற்கு வட்டி வழங்கப்படும்.
கணக்கு துவக்காவிட்டாலும், அவர்கள், வழக்கமாக பேடிஎம் வாயிலான மின்னணு பணப் பை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். பேடிஎம் சேவையை ரத்து செய்ய விரும்பினால், வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். பேடிஎம் கணக்கில் உள்ள இருப்பு தொகை, அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|