பதிவு செய்த நாள்
11 ஜன2017
23:57
குஜராத் : பிளிப்கார்ட் துணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறியதாவது: பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு, இந்தாண்டு மிக முக்கியமானதாக இருக்கும். வலைதள பொருட்கள் விற்பனை சந்தையில், தீர்க்கமான முடிவுகளை, நிறுவனம் எடுக்கும். நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தினால், திட்டங்களை சுலபமாக நிறைவேற்ற முடியும். இதனால், வர்த்தகம் பெருகும். இத்தகைய நடவடிக்கைகளை கூர்மையாக செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், பின்னி பன்சால், நிறுவனத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பண மதிப்பு நீக்கத்தால், மின்னணு பரிவர்த்தனைகள் அதிகரித்து, ரொக்கப் பரிமாற்றம் குறைந்துள்ளது. இது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும். பண்டிகை கால விற்பனையால், நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பிளிப்கார்ட், சமீபத்தில் அதன் அனைத்து பிரிவுகளையும் ஒரு குழுமத்தின் கீழ் கொண்டு வந்து, செயல் தலைவராக, பின்னி பன்சாலை நியமித்தது. வடிவமைப்பு பிரிவின் தலைவர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, பிளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|