பதிவு செய்த நாள்
11 ஜன2017
23:58
மும்பை : பிரிட்டனைச் சேர்ந்த, பார்க்லேஸ் பேங்க், இந்திய அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் உடன் இணைந்து, நாடு முழுவதும் வங்கிச் சேவையை விரிவுபடுத்த, ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, பார்க்லேஸ் இந்தியா நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் புஷ்கராஜ் குமஸ்தே கூறியதாவது: வங்கி, ஏற்கனவே, இந்தியா போஸ்ட் உடன் இணைந்து, மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள, 40 ஆயிரம் அஞ்சலகங்கள் மூலம், நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போதைய ஒப்பந்தத்தால், இந்தியா போஸ்ட் உடனான வர்த்தக உறவு, மேலும் வலுவடைந்து உள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில், பார்க்லேஸ் வங்கிச் சேவை விரிவுபடுத்தப்படும். இதனால், குறிப்பாக, குக்கிராமங்களுக்கும் பணம் அனுப்ப விரும்பும், வங்கி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் என்ற வணிக பெயரில், நாடு முழுவதும், 1,55,000 அஞ்சலகங்களை இயக்கி வருகிறது; அவற்றில், 89 சதவீதம், கிராமப்புறங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய அஞ்சல் துறைக்கு, இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட வங்கிச் சேவையை துவக்க, சமீபத்தில் அனுமதி கிடைத்தது.இதையடுத்து, சிட்டி பேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் உள்ளிட்ட, பல பன்னாட்டு வங்கிகள், இந்தியா போஸ்ட் உடன் இணைந்து, வங்கிச் சேவைகளை வழங்க தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அவற்றில், முதன்முதலாக, பார்க்லேஸ் பேங்க் உடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|