பதிவு செய்த நாள்
11 ஜன2017
23:59
புவனேஸ்வர் : சர்வதேச விமான சரக்கு சேவை, ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் துவக்கப்பட இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் இருந்து, கடல் உணவு, வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை, அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள், ஆந்திர மாநிலம், ஐதராபாத்; மேற்கு வங்கம், கோல்கட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து, சரக்கு விமானங்கள் வாயிலாக, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் விமான நிலையத்தில், வரும், 27ல், சர்வதேச சரக்ககம் துவங்கப்பட உள்ளது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துவக்கி வைக்க உள்ளார்.
இது குறித்து, அம்மாநில குறு, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒடிசாவில், கடல் உணவு, வேளாண் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்டவை, அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ஒடிசாவில் சர்வதேச விமான சரக்கு சேவை இல்லை. இதனால், பிற மாநில விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. தற்போது, ஒடிசாவில், சர்வதேச விமான சரக்கு சேவை மையம் துவங்கப்பட இருப்பது இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|