பதிவு செய்த நாள்
13 ஜன2017
00:32
கூர்கான் : ‘‘மத்திய அரசு, நாட்டில், 18 மின்னணு உற்பத்தி மண்டலங்களை அமைக்க முடிவு செய்துள்ளது,’’ என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: உலகில், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில், இந்தியாவின் பங்கு அதிகம் உள்ளது. வரும், 2020ல், இந்தியாவில், மின்னணு சாதனங்களின் சந்தை மதிப்பு, 40 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உள்நாட்டில், மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்க, 18 மண்டலங்களை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதால், அவை சார்ந்த கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதனால், மொபைல் வாலட் தவிர்த்து, ஒரு கோடி, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவிகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.
தற்போது, மொபைல் போன்களின் எண்ணிக்கை, 105 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில், 42 மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களும், 30 உதிரிபாக நிறுவனங்களும் உள்ளன. மொபைல் தொழில் துறையை ஊக்குவிக்க, கூடுதல் சலுகைகள் வழங்கப்படும். மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 1.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|