ரூபாய் மதிப்பில் சரிவு : 68.19ரூபாய் மதிப்பில் சரிவு : 68.19 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு ...
ரூ.999 க்கு 4ஜி போன்கள் : ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2017
10:47

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் போன்களை இந்தியாவில் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பீச்சர் போன் சந்தையில் 4ஜி எல்டிஇ அல்லது வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோவின் பீச்சர் போன்களில் இலவச வாய்ஸ்கால் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியான ஆய்வறிக்கையில், முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனம் வெளியிட இருக்கும் ரூ.999 மற்றும் ரூ.1500 விலை கொண்ட பீச்சர் போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் இவை மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பீச்சர் போன்கள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ஸ்மார்ட்போன் சந்தையில் மிக பெரிய போட்டியை ஏற்படுத்தும். இதன் பின் மக்கள் பீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவதை தவிர்த்து பீச்சர் போன்களில் இருந்து வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்ட பீச்சர் போன்களையே அதிகம் வாங்குவர் என சைபர்மீடியா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் வோல்ட்இ பீச்சர்போன்களில் முன்பக்கம் மற்றும் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும், இவற்றுடன் ஜியோ செயலிகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஜியோவின் டிஜிட்டல் வேலெட் சேவைகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவின் பீச்சர் போன்கள் வெளியாகும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி மாற்றியமைக்கப்படும் என சந்தை வல்லுர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு பீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறுவோர் எண்ணிக்கை கனிசமாக குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)