பதிவு செய்த நாள்
14 ஜன2017
03:41
மும்பை:‘தங்கம் கடத்தலை தடுக்க, அதன் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்’ என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:தங்கம் இறக்குமதிக்கு, தற்போது, 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், தங்க நகை ஏற்றுமதியும் குறைந்துள்ளது. ஆகவே, சட்டப் புறம்பாக நடைபெறும், தங்க வர்த்தகத்தை தடுக்க, மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். உலகளவில், வைரங்களை நறுக்கி, பட்டை தீட்டும் பணியில், இந்தியா, 93 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அதனால், வைரங்கள் இறக்கு மதிக்கு, தற்போதுள்ள வரி விலக்கு சலுகை, விரைவில் அறிமுகமாக உள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்திலும் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|