பதிவு செய்த நாள்
14 ஜன2017
03:42
புதுடில்லி:டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 6,778 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்தியாவில், டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தகவல் தொடர்பு துறையில், பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம், கடந்த டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 6,778 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 6,110 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், அந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், 7,733 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய், 8.7 சதவீதம் உயர்ந்து, 27 ஆயிரத்து, 364 கோடி ரூபாயில் இருந்து, 29 ஆயிரத்து, 735 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் கூறுகையில், ‘‘டிஜிட்டல் துறையில், எங்கள் பலமும், வாடிக்கையாளர்கள் குறித்த ஆழமான அறிவும், இந்த மூன்றாவது காலாண்டில், எங்களை முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்லும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|