பதிவு செய்த நாள்
15 ஜன2017
04:04
புதுடில்லி;ம.பி.,யில், தனியார் மருத்துவ கல்லுாரிக்கு எதிராக, தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், அற்ப காரணங்களுக்காக கோர்ட் நேரத்தை வீணடித்ததற்காக, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்கு, போபால் அருகே, தனியார் அமைப்புக்காக மருத்துவ கல்லுாரி கட்ட, அரசு நிலம், ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அங்குள்ள தொண்டு நிறுவனம், அம்மாநில ஐகோர்ட்டில், பொதுநல வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த, ம.பி., ஐகோர்ட், கடந்த, 2012ல், ‘பொதுமக்களின் மருத்துவ தேவையை கருத்தில் வைத்தே, மருத்துவ கல்லுாரிக்கு, அரசு இடம் வழங்கியுள்ளது’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின், சுப்ரீம் கோர்ட்டில், விடுமுறை கால அமர்வில், தொண்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு, உத்தரவிட்டதாவது:பொது மக்களின் நலனுக்காகவே, அங்கு மருத்துவ கல்லுாரி துவக்கப்படுகிறது. ஆனால், தாமதமாக இந்த வழக்கை, அவசர வழக்கமாக விசாரிக்கும்படி மனுதாரர் கோரியுள்ளார்; வெறும் அற்ப காரணத்திற்காக, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது; இதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்; மனுதாரர், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|