பதிவு செய்த நாள்
15 ஜன2017
04:06
மும்பை:'இந்தியாவின் 'டிஜிட்டல்' சந்தை, 2020ல், 20ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை தாண்டி வளர்ச்சி காணும்' என, யர்னஸ்ட் அண்டு யங் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதன் விபரம்: கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், டிஜிட்டல் சந்தையின் மதிப்பு, 8,490 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதில், ஸ்மார்ட்போன்கள் வாயிலான விளம்பரங்கள், வீடியோ, இசை, விளையாட்டு ஆகிய நான்கு பிரிவுகளின் வருவாய், குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
கடந்த, 2015 நிலவரப்படி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு, 31 சதவீதமாக இருந்தது. இது, 2020 இல், 59 சதவீதமாக உயரும். இதே காலத்தில், டிஜிட்டல் விளம்பரங்களுக்காக செலவிடுவது, 18,500 கோடி ரூபாயாக அதிகரிக்கும். தற்போது, ஒட்டுமொத்த விளம்பர செலவினங்களில், டிஜிட்டல் ஊடகங்களின் பங்கு, 14 சதவீதமாக உள்ளது. இது, 2019ல், 25 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில், 'ஆன்–லைன்' திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்ப்போரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து, 45 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பிரிவில், உலகளவில், சீனாவிற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கும். கிராமப்புறங்களிலும், டிஜிட்டல் பயன்பாடு பெருகி வருகிறது. இதனால், இந்தியாவில் டிஜிட்டல் சந்தை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|