பதிவு செய்த நாள்
15 ஜன2017
04:07
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, வருகின்ற மாதங்களிலும் தொடர்ந்து வளர்ச்சியை காணும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து நான்கு மாதங்களாக வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து வரும் மாதங்களிலும், ஏற்றுமதி வளர்ச்சியடையும் என்றும், அதன் பயனாக நடப்பு நிதியாண்டில், 270 _280 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் இத்துறையினர் கருதுகின்றனர்.
இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், எஸ்.சி.ரால்கான் கூறியுள்ளதாவது:அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா ஆகிய நாடுகள் இந்த காலகட்டத்தில் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில், நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த வளர்ச்சியானது எங்களுக்கு ஊக்கத்தை தருவதாக இருக்கிறது.இத்தகைய தொடர்ச்சியான வளர்ச்சியை பார்க்கும்போது, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியானது, 270 முதல் 280 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், 5.72 சதவீதம் வளர்ச்சி பெற்று, 23.9 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 0.75 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 198.8 பில்லியன் டாலர் அளவில் உள்ளது.அதேசமயம், இறக்குமதியை பொறுத்தவரை, 7.42 சதவீதம் குறைந்து, 275.3 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|