பதிவு செய்த நாள்
16 ஜன2017
23:26
புதுடில்லி : சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான, விரிவான தகவல்களை பெற, ‘எஸ்.இ.இசட்., இந்தியா’ எனும் மொபைல் போன் செயலியை, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மின் ஆளுமை திட்டத்தின் கீழ், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான விரிவான தகவல்களை, ‘எஸ்.இ.இசட்., இந்தியா’ ஆப் மூலம் பெறலாம். இந்த அப்ளிகேஷனை, அனைத்து, ‘ஆண்டுராய்டு’ மொபைல் போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிர்வகிப்போர் மற்றும் அவற்றில் இணைந்துள்ள நிறுவனங்கள், தங்கள் தகவல்களை, எளிதில் அறிய முடியும்; தங்கள் நடவடிக்கைகளை, ஆன்லைன் சிஸ்டம் மூலம் கண்காணிக்க முடியும்; அனைத்து பரிமாற்றங்களையும், டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடியும். இந்த ஆப் மூலம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், சரக்கு போக்குவரத்து தகவல்களை, துல்லியமாக கண்காணிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|