பதிவு செய்த நாள்
16 ஜன2017
23:36
புதுடில்லி : நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மணிஷ் சர்மா கூறியதாவது: வீடுகளில் பயன்படுத்தும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் இறக்குமதிக்கு தற்போது, 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதை, மத்திய பட்ஜெட்டில், 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனால், இவ்வகை சாதனங்களின் இறக்குமதி குறைந்து, உள்நாட்டு நிறுவனங்கள் பயன்பெறும். இது, மத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கும் ஊக்கம் அளிக்கும்.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, வரும் ஏப்., முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வீட்டு பயன்பாட்டிற்கான, நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கு, 18 சதவீதத்திற்குள் வரி விதிக்குமாறு, நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், கடந்த ஆண்டு, நவ., – டிச., மாதங்களில், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் விற்பனை குறைந்திருந்தது. தற்போது, இயல்பு நிலை திரும்பி வருகிறது. வரும், 2021 வரை, இத்துறை, ஆண்டுக்கு சராசரியாக, 9.5 சதவீத வளர்ச்சி காணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|