பதிவு செய்த நாள்
18 ஜன2017
03:03
டாவோஸ்: இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்தாண்டு, தங்கள் நிறுவன வருவாயும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என, தெரிவித்து உள்ளனர்.பி.டபிள்யு.சி., நிறுவனம், 2016 செப்., – டிச., வரையிலான காலத்தில், உலகளவில், 1,379 நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து, அவற்றின் தலைமை செயல் அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தியது.இதில், 57 சதவீதம் தனியார் நிறுவனங்கள்; 43 சதவீதம் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகும். இவற்றில், 36 சதவீதம், ஆண்டுக்கு, 100 கோடி டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆய்வறிக்கை விபரம்:கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, அதிகளவிலான தலைமை செயல் அதிகாரிகள், தங்கள் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி உயரும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதில், இந்தியாவின் பங்களிப்பு, 71 சதவீதமாக உள்ளது. அடுத்து, பிரேசில், 57, ஆஸ்திரேலியா, 43, பிரிட்டன், 41 சதவீதம் என்றளவில் உள்ளன.ஆய்வில் பங்கேற்றோரில், 52 சதவீதம் பேர், இந்தாண்டு, தங்கள் நிறுவனங்களில் பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்; இது, கடந்த ஆண்டு, 48 சதவீதமாக இருந்தது.இந்த பட்டியலில், இந்தியா, 67 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், கனடா, 64, பிரிட்டன், 63, சீனா, 60 சதவீதம் என்றளவில் உள்ளன.இந்த ஆய்வில், பெரும்பான்மையானோர், ஸ்திரமற்ற பொருளாதார சூழல், அதிகளவிலான கட்டுப்பாடு, திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஆகியவை, நிறுவன வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என, கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|