எஸ்.பி.ஐ., கார்டு வினியோகம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம்எஸ்.பி.ஐ., கார்டு வினியோகம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.90 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.90 ...
‘அன்னிய செலாவணி வருவாய்க்கு சேவை வரி விலக்கு வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2017
03:05

புதுடில்லி : ‘உள்­நாட்டு சுற்­றுலா மற்­றும் பயண திட்­டங்­களில் ஈட்­டப்­படும் அன்­னிய செலா­வ­ணிக்கு, சேவை வரி­யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்’ என, சுற்­றுலா மற்­றும் பய­ணச் சேவை நிறு­வ­னங்­கள், மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்ளன.இது குறித்து, காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிதி அதி­காரி, அனில் கந்­தல்­வால் கூறி­ய­தா­வது:இந்­தி­யா­வில், அதி­க­ள­வில் அன்­னிய செலா­வணி ஈட்­டித் தரும் துறை­களில், சுற்­றுலா மற்­றும் பய­ணச் சேவை­கள் துறை, முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கி வரு­கிறது; உல­க­ள­வில், மொத்த சேவை­கள் வர்த்­த­கத்­தில், மூன்­றில் ஒரு பங்கு என்­ற­ள­வில் உள்­ளது.இவற்றை கருத்­தில் கொண்டு, மத்­திய பட்­ஜெட்­டில், சுற்­றுலா மற்­றும் பய­ணச் சேவை­கள் துறைக்கு, வரிச்­ச­லு­கை­கள் வழங்க வேண்­டும்.குறிப்­பாக, உள்­நாட்டு சுற்­று­லா­வில், பயண நிறு­வ­னங்­கள் ஈட்­டும் அன்­னிய செலா­வணி வரு­வாய்க்கு, சேவை வரி­யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும்.தற்­போது, உள்­நாட்­டில் சேவை வரி செலுத்தி விட்டு, வெளி­நாடு செல்­லும் ஒரு­வர், அங்­கும், ஜி.எஸ்.டி., அல்­லது ‘வாட்’ வரி செலுத்­தும் நிலை உள்­ளது. இந்த இரட்டை வரி முறையை நீக்கி, ஒரே வரி விதிப்பை அமல்­ப­டுத்த, மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.இந்­தி­யா­விற்கு உட்­பட்ட பய­ணத்­திற்கு மட்­டுமே, சேவை வரி அல்­லது ஜி.எஸ்.,டி., வரி விதிக்க வேண்­டும்.ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, வரும் ஜூலை முதல் அம­லுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.அதற்கு முன், அண்டை நாடு­களில் உள்ள, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு விப­ரங்­களை, மத்­திய அரசு ஆராய வேண்­டும். அவற்­றின் அடிப்­ப­டை­யில், சுற்­றுலா மற்­றும் பய­ணத் துறைக்கு, சரக்கு மற்­றும் சேவை வரியை நிர்­ண­யிக்க வேண்­டும்.சுற்­றுலா துறைக்­கான வரிச் சட்­டங்­களை எளி­மை­யாக்­கு­வ­தற்கு, முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும். அதன் மூலம், சேவை வரி தொடர்­பான வழக்­கு­கள் அதி­க­ரிப்­பதை குறைக்க முடி­யும்.ஜி.எஸ்.டி., அம­லுக்கு பின் ஏற்­படும் பிரச்­னை­களை தவிர்க்க, சுற்­றுலா துறை வரி விதிப்பு சார்ந்த செயல்­திட்­டத்தை உரு­வாக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

‘ஒளி­ரும் இந்­தியா’ மத்­திய அரசு, ‘ஒளி­ரும் இந்­தியா’ பிராண்டை மேலும் வலுப்­ப­டுத்த, ஏரா­ள­மான சுற்­றுலா தலங்­களை உரு­வாக்க வேண்­டும். சுற்­றுலா துறை­யின் வளர்ச்­சிக்கு, சாலை, ரயில் வசதி அவ­சி­யம். அது தொடர்­பான அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, அரசு அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும்.மிகச் சிறந்த முறை­யில் விடு­மு­றையை கழிக்க, இந்­தி­யா­வில் ஏரா­ள­மான சுற்­றுலா தலங்­கள் உள்ளன என்­பதை, வலி­மை­யான பிர­சார உத்­தி­க­ளால், உல­க­ள­வில் பரப்ப வேண்­டும். இத­னால், இந்­திய சுற்­றுலா துறை மேலும் சிறப்­பான வளர்ச்சி காணும்.மத்­திய பட்­ஜெட்­டில், சுற்­றுலா துறை­யின் வளர்ச்­சிக்­கான முக்­கிய அம்­சங்­கள் இடம் பெறும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.மாத­வன், தலை­வர், தாமஸ் குக் இந்­தியா குழு­மம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)