பதிவு செய்த நாள்
21 ஜன2017
05:58
ஆமதாபாத் : ‘மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்துள்ளது’ என, சாம்சங் இந்தியா நிறுவனத்தின், மொபைல்போன் பிரிவின் துணை தலைவர் மனு சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், ரொக்க பரிவர்த்தனையில் இருந்து, ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு பலர் மாறி வருகின்றனர்.இதற்காக, ‘இ–வாலட்’ எனப்படும் மின்னணு பணப் பை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இத்தகைய வசதிகளை சுலபமாக மேற்கொள்ள, ஸ்மார்ட்போன் உதவுவதால், அவற்றை வாங்குவதும் அதிகரித்து வருகிறது.இது, ஒட்டுமொத்த மொபைல்போன் துறை வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது.
நாட்டில், தற்போது, 22 கோடி பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். தற்போது, ஏராளமானோர் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறி வருவதையடுத்து, இந்தாண்டு, குறிப்பிடத்தக்க அளவிற்கு ஸ்மார்ட் போன் விற்பனை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மொபைல்போன் துறை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இத்துறையில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல், இயல்பு நிலை திரும்பியுள்ளது. தற்போது, மொபைல்போன் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|