பதிவு செய்த நாள்
21 ஜன2017
06:03
புனே : யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: பதஞ்சலியின், உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத, நுகர்பொருட்களின் விற்பனை அமோகமாக உள்ளது. அதனால், பதஞ்சலி நிறுவனம், மிகப் பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டு வருகிறது. இது, இத்துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் துாக்கத்தை கெடுத்துள்ளது. எந்த பன்னாட்டு நிறுவனமும், இந்தியாவின் மீது உள்ள அன்பால், இங்கு தொழில் துவங்க வருவதில்லை. அந்நிறுவனங்கள், ௧ ரூபாய் முதலீடு செய்து, 100 ரூபாயை தங்கள் நாட்டிற்கு கொண்டு போகின்றன.
தற்போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக பதஞ்சலி உருவெடுத்துள்ளது. அதனால், பன்னாட்டு நிறுவனங்கள், உறக்கமின்றி தவிக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பம், மூலதனம், இயற்கை வளம் உள்ளிட்ட அனைத்திலும், சுயசார்புள்ள நாடாக, இந்தியா விளங்குகிறது. வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும், பதஞ்சலி களமிறங்கும். அந்தந்த நாடுகளில் சம்பாதிப்பதை, அங்குள்ள மக்களின் வளர்ச்சிக்கு செலவிட்டால், எந்த நாடும் என்னை எதிரியாக பாவிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|