பதிவு செய்த நாள்
23 ஜன2017
23:54
புதுடில்லி : இந்திய வர்த்தக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனினும், அமைப்பு சார்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்கள், நீண்ட கால அளவில் பயன் பெறும். பண மதிப்பு நீக்கத்தால், கிராமப்புற நுகர்வும், வேலைவாய்ப்புகள் உருவாவதும் குறைந்துள்ளன. வேளாண், சிமென்ட், உரம், வாகனம், ஜவுளி மற்றும் சில்லரை விற்பனை துறைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நடப்பு நிதியாண்டின், செப்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டை விட, ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறையும். மின்சாரம், எண்ணெய், எரிவாயு, மருந்து, ஐ.டி., மின்னணு மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்காது. பணத் தட்டுபாடு காரணமாக, காய்கறிகள் விலை சரிவடைந்து, நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|