பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புபண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பு ... இந்திய நிறுவனங்களின் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்து சாதனை இந்திய நிறுவனங்களின் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்து சாதனை ...
சாம்சங் போன் தீ பிடித்ததற்கு பேட்டரி குறைபாடே காரணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
23:55

சியோல் : சாம்­சங் நிறு­வ­னம், அதன், ‘கேலக்ஸி நோட் – 7’ மொபைல் போன்­கள் தீ பிடித்­த­தற்கு, பேட்­டரி குறை­பாடே கார­ணம் என, தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் மொபைல் வர்த்­தக பிரி­வின் தலை­வர், கோ டாங்ஜின் கூறி­ய­தா­வது: எங்­கள் நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­மான, சாம்­சங் எஸ்.டி.ஐ., தயா­ரித்த பேட்­ட­ரியே, ‘கேலக்ஸி நோட் – 7’ மொபைல் போன் தீ பிடித்­த­தற்கு கார­ணம். எங்­கள் நிறு­வ­னம் மற்­றும் வெளி நிறு­வ­னங்­கள் மூல­மான ஆய்­வில், இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. நிறுவனத்தை சேர்ந்த, 700 ஆராய்ச்­சி­யா­ளர்­கள் மற்­றும் பொறி­யி­ய­லா­ளர்­கள் மூல­மாக, 2 லட்­சம் போன்­கள் மற்­றும் 30 ஆயி­ரம் பேட்­ட­ரி­கள் ஆகி­ய­வற்றை ஆய்வு செய்து, பேட்­டரி குறை­பாடே கார­ணம் என, முடி­வுக்கு வந்­துள்­ளோம். அந்த பேட்­ட­ரி­யின் வடி­வ­மைப்பு மற்­றும் உற்­பத்­தி­யில் உள்ள பிரச்­னை­களை தீர்க்க, நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன.
இந்த மாதி­ரி­யான பிரச்­னை­கள், இனி வரும் காலங்­களில் ஏற்­ப­டாது என, உறுதி அளிக்­கி­றோம். வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்ட பிரச்­னைக்­காக, கவலை அடை­கி­றோம்; மன்­னிப்­புக் கேட்டு கொள்­கி­றோம். கடந்த, 2016 செப்­டம்­ப­ருக்கு பின், 25 லட்­சம், ‘கேலக்ஸி நோட் – 7’ மொபைல் போன்­கள் திரும்ப பெறப்­பட்­டுள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)