பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:55
புதுடில்லி : ஏசியன் பெயின்ட்ஸ், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 489 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 482.02 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 4,245.16 கோடி ரூபாயில் இருந்து, 4,353.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம், பெயின்ட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாய், 4,284.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 4,179.97 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
ஏசியன் பெயின்ட்ஸ், குஜராத் மாநிலம், அங்கலேஸ்வர் இடத்தில் உள்ள தொழிற்சாலையை, விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 1.3 லட்சம் கிலோ லிட்டர் என்ற அளவிலிருந்து, 3 லட்சம் கிலோ லிட்டர் அளவுக்கு, நிறுவனத்தின் பெயின்ட் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். மேலும், எமெல்சன் உற்பத்தியும், 32 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து, 85 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|