பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:57
புதுடில்லி : மும்பை பங்குச்சந்தையின், ‘பி.எஸ்.இ., 500’ குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில், 50 சதவீத நிறுவனங்கள், வரும் ஏப்ரலில், அவற்றின் ஆடிட்டரை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளன.
மத்திய அரசின், 2013ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டப்படி, குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த, கார்ப்பரேட் நிறுவனங்கள், சுழற்சி முறையில், குறித்த காலத்திற்கு ஒருமுறை, அவற்றின் நிதி நிலை கணக்குகளை ஆய்வு செய்வதற்கான ஆடிட்டர்களை மாற்ற வேண்டும்.அதுமட்டுமின்றி, வளர்ந்த நாடுகள் கடைபிடிக்கும், ஒளிவுமறைவற்ற, தரமான கணக்கு தணிக்கை நடைமுறைகளையும், இந்திய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறைப்படி, நடப்பு 2016 – 17ம் நிதியாண்டுக்கான, கணக்கு தணிக்கைக்கு, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் ஆடிட்டரை தேர்வு செய்வது சவாலாக இருக்கும் என, ஐ.ஐ.ஏ.எஸ்., ஆலோசனை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|