பதிவு செய்த நாள்
25 ஜன2017
23:35
புதுடில்லி : சி.ஐ.ஐ. – பி.சி.ஜி., வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: இந்தியாவும், ஐரோப்பிய கூட்டமைப்பும், 2007 ஜூன் முதல், தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்தி வருகின்றன. எனினும், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட, பல பிரச்னைகளில் ஒருமித்த கருத்து உருவாகாததால், ஒப்பந்தம் தாமதமாகிறது.
இந்த ஒப்பந்தத்தை, விரைவாக இறுதி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகள் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன. தாராள வர்த்தக ஒப்பந்தம் அமலானால், இந்தியா, சர்வதேச போட்டியை சுலபமாக சமாளிக்க முடியும்.
உள்நாட்டில், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும். பாரபட்சமற்ற வரி விகிதங்களை நிர்ணயித்து, மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். அறிமுகமாக உள்ள, ஜி.எஸ்.டி., வரி, பருத்தி மற்றும் செயற்கை நுாலிழைகளுக்கு, ஒரே விகிதத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|