பதிவு செய்த நாள்
25 ஜன2017
23:36
மும்பை : ‘குறு, சிறு தொழில்களுக்கு வட்டி மானியம் வழங்கினால், அரசின் வரி வருவாய், மூன்று மடங்கு உயரும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் வட்டி மானியம் வழங்கினால், 38, விதமான வேலைவாய்ப்புகள் உருவாகும்; அந்நிறுவனங்களின் தயாரிப்புகள் மூலம், அரசுக்கு கிடைக்கும் மறைமுக வரி வருவாய் மூன்று மடங்கு உயரும். அத்துடன், அந்நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகரிக்கும்.வட்டி மானியம் என்பது, அரசுக்கு இழப்பு தான் என்றாலும், அதை, வரி வருவாய் மூலம், லாபகரமாக மாற்றலாம்.
உதாரணமாக, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெறும் கடனுக்கு, 3,000 கோடி ரூபாய் வட்டி மானியம் வழங்கும்பட்சத்தில், அரசுக்கு, 8,400 கோடி ரூபாய் மறைமுக வரி வருவாய் கிடைக்கும்; ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.குறு, சிறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிலை, எதிர்கால திட்டங்கள், வர்த்தக வாய்ப்பு ஆகியவற்றின் பேரில், கடன் தகுதி குறியீடு வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 1 – 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கலாம். அது போல, 3 – 5 ஆண்டுகளாக, சாதகமான கடன் தகுதி குறியீடு பெற்று வரும் நிறுவனங்களுக்கு, கூடுதலாக வட்டி மானியம் அளிக்கலாம்.
கடந்த, 2005 முதல், 1.25 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், கடன் தகுதி குறியீட்டை பெற்று வருகின்றன. இதனால், அவை, சுலபமாக கடன் பெறவும், நிதி நிலையை சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. இந்த வகையில், 1,583 குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில், அவை, 0.75 சதவீதம் வட்டி செலவை குறைத்துஉள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|